கடலூரில்., அன்பான கணவருக்கு.. உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன்..!! குழந்தைகளை கொலை செய்து எழுதிய கடிதத்தை கண்டு அதிர்ந்து போன கணவன்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பாதிரிக்குப்பத்தில் இருக்கும் சிவசங்கரி என்ற பெண் ஒருவர் தனது மகன்களை கொலை செய்து பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை மற்றும் கொலை முடிவிற்கு முன்னதாக தனது கணவர் மதிவாணன் (காவல் துறை அதிகாரி)., தாயார் சுமதி மற்றும் தனது தங்கைகளுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது., 

எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில்., எனது கணவருக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டேன். 

கணவர் மதிவாணன் மிகவும் அமைதியானவர்., பொறுமையானவர்., நல்லவர். அவரை அதிகளவு துயரத்தில் ஆழ்த்தி அழவைத்து விட்டேன். இதன் காரணமாக எனது இரண்டு மகன்களையும் கொலை செய்து நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். 

எனது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்., என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்., இந்த கடிதத்தில் தற்கொலை குறித்த காரணங்கள் ஏதும் இல்லாததால்., அது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore a mother killed her children and attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->