காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி., கழிவறையில் பிணமாக தொங்கிய சோகம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள மெய்யாத்தூர் பகுதியை சார்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவியின் பெயர் உமா. இவர்கள் இருவருக்கும் துர்கா தேவி என்னும் 13 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றார். 

துர்கா தேவி அங்குள்ள அரசு நடுநிலைபள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். துர்கா தேவி படிப்பு மற்றும் பண்பில் சிறந்து விளங்கிய காரணத்தாலும்., அவரது இல்லமானது பள்ளிக்கு மிக அருகில் என்ற காரணத்தாலும்., பள்ளியின் திறவுகோலை மாணவியிடம் பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியுள்ளார். 

காலையில் விரைவாக பள்ளிக்கு வரும் வழக்கத்தை வைத்திருந்த துர்கா தேவி., பள்ளியை திறந்து வைப்பது வழக்கம். அந்த வகையில்., நேற்று பள்ளிக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு., சுமார் 8 மணியளவில் இல்லத்தை விட்டு வெளியேறிய சிறுமி., பின்னர் வீட்டிற்கு வரவில்லை. 

தேர்வுகள் நடைபெறும் சமயம் என்ற காரணத்தால் மாணவி பள்ளியிலேயே அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கலாம் என்று பெற்றோர்கள் இருக்கவே., பள்ளிக்கு வந்த மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்ற சமயத்தில்., அங்கு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். 

இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மாணவி., அலறியடித்துக்கொண்டு தலைமையாசிரியரிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்., சிறுமியின் பிரேத பரிசோதனை ஆய்வின் முடியானது வெளியாகும் பட்சத்தில்., இந்த வழக்கு விசாரணையானது தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பல சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore a girl attempt suicide in school campus at morning


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->