கோயம்புத்தூரில் கல்லூரி மாணவிகளுக்கு காதல் வலை.! காதலனால் எடுக்கப்பட்ட ஆபாச காட்சிகள்.!! சிக்கும் பலே கும்பல்., வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் 19 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். இவருக்கு அதே பகுதியை சார்ந்த சபரிராஜன் என்ற பெண்ணுடன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் நட்பாக மலர்ந்து., காதலாக வளர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர். 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண்ணிற்கு தொடர்பு கொண்ட காதலர்., வெளியே செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு வெளியே செல்வதற்கு சம்மதம் தெரிவித்த பெண்., அவருடன் வெளியே சென்றுள்ளார். 

அந்த நேரத்தில்., தனது காதலியை சபரிராஜன் ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். இது குறித்து அந்த பெண் கேட்ட போது., ஆபாச காட்சிகளை வெளியே விடுவிடுவதாகவும்., கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி 1 சவரன் நகைகளை பறித்து அனுஉப்பியுள்ளனர். 

இல்லத்திற்கு மீண்டும் திரும்பிய மாணவி தனக்கு நடந்த பிரச்சனைகளை பெற்றோர்களிடம் கூறி கதறியாவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., சபரிராஜன் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழவைத்து., அவர்களை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினர் இந்த விஷயம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girls miss used by her lover police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->