கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை அருகேயுள்ள துடியலூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். 

அந்த வகையில்., பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததை அடுத்து சிறுமியை தேடி அழைத்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில்., அங்குள்ள கஸ்தூரிநாயக்கன் புத்தூர் பகுதியில் உள்ள இடத்தில் சிறுமியின் பிரேதம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்த வழக்கு தொடர்பான சுமார் 60 க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., நேற்று குற்றவாளியான சந்தோஷ் குமாரை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. 

அந்த விசாரணையில்., கடந்த 2015 ம் வருடத்தில் சந்தோஷ் குமாருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில்., திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மனைவி பிரிந்து சென்றதை அடுத்து., துடியலூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில்., உடல் நலக்குறைவாக இருந்த பாட்டியை கவனித்து., அவருடனே தங்கி இருந்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில்., கடந்த 25 ம் தேதியதன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அழைத்து வீட்டிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் சிறுமி அலறவே., அவரின் கழுத்தை நெரித்ததை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். 

பின்னர் சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடுவதை அறிந்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட கூடாதென்று அவர்களுடனே சிறுமியை தேடி அலைந்துள்ளார் . பின்னர் சிறுமியின் உடலை தனது டீ-ஷர்ட்க்குள் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும்., அன்றைய தினம் பாட்டியை காண வந்த உறவினர்களும் பாட்டியின் சாவில் மர்மம் இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சந்தோஷ் குமார்., சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தை பாட்டி அறிந்திருக்கும் பட்சத்திலேயே அவரை கொலை செய்திருக்கலாம் என்று அங்குள்ள மக்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். 

இதனையடுத்து இந்த விபரங்கள் காவல் துறையினருக்கு தெரியவரவே., அதிகாலையில் சந்தோஷை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து., நீதிபதியின் உத்தரவின் படி சுமார் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர் மர்மங்கள் இருப்பதை அடுத்து., அவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

இது குறித்து விபரம் தெரிந்த நபர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டிய அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. 9498104407., 9443122744., 9498173353., 9498174226., 9498101198., 0422-2642990 விபரம் தெரிந்த நபர்கள் காவல் துறையினரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girl sexual harassment killed case police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->