கோவையை உலுக்கிய 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு.! சத்தம் கேட்காமல் இருக்க வாயில் துணி... அரங்கேறிய கொடூரங்கள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை அருகேயுள்ள திப்பனூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். 

அந்த வகையில்., பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததை அடுத்து சிறுமியை தேடி அழைத்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில்., அங்குள்ள கஸ்தூரிநாயக்கன் புத்தூர் பகுதியில் உள்ள இடத்தில் சிறுமியின் பிரேதம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து விஜயகுமார்.,  பிளஸ்-2 மாணவர், கவுதமன், சந்தோஷ்குமார், துரைசாமி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவலானது ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்த நிலையில்., மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையானது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமி பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பல முறை தொடர்ந்து உட்படுத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் என்றும்., சிறுமி கத்தாமல் இருப்பதற்கு அவரின் வாய் மற்றும் மூக்கை துணியால் அழுத்தி பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்த தொடர் விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில்., இது குறித்து தற்போது வரை சுமார் 60 க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும்., அங்கிருக்கும் கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தையும் சோதனை செய்து கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் கிடைக்காமல் காவல் துறையினர் தீவிர விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து விபரம் தெரிந்த நபர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டிய அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. 9498104407., 9443122744., 9498173353., 9498174226., 9498101198., 0422-2642990 விபரம் தெரிந்த நபர்கள் காவல் துறையினரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girl rapped and killed investigation announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->