செல்லமாக வளர்த்த மகன்.! குடியால் மனைவியுடன் வாழ வழியில்லை.!! பெற்றோர்கள் எடுத்த விபரீத முடிவால்., கண்ணீரில் தத்தளிக்கும் உறவினர்கள்.!!
in Coimbatore a parents attempt suicide due to her sons family problem
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் வடக்கு வீதியை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 75)., இவரது மனைவியின் பெயர் நச்சம்மாள் (வயது 68). இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.
இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சார்ந்த ஜெயப்பிரதா என்னும் பெண்ணை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் வேற்று சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றாலும்., இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்து வரும் மது பழக்கத்திற்கு ஆளான கார்த்தி., தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார்., மேலும்., வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில்., கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில்., மனைவி ஜெயப்பிரதா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் பெற்றோரின் வீட்டில் இருக்கும் கார்த்திக் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக கடும் மனவேதனையில் இருந்து வந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி நச்சம்மாள்., இன்று காலை 3 மணியளவில் தீடீரென வலிப்பு ஏற்படவே., இதனை கண்டு அலறியபடி நச்சம்மாள் ஓடினார்.
இவர்களின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் தந்தையை பார்த்துக்கொண்டு இருக்கும் சமயத்தில்., தாயார் நச்சம்மாளும் மயங்கி விழுந்தார். இவர்களின் உடலை பார்த்து கதறியழுத கார்த்திக்கின் குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
செல்லமாக வளர்ந்த மகன்., திருமணம் முடிந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்துடன் வாசிக்காமல்., வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை அளித்துள்ளது. இதனால் இருந்த மன வேதனையில் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in Coimbatore a parents attempt suicide due to her sons family problem