கள்ளகாதலனுக்கு ரூ.20 இலட்சம் செலவு செய்து கள்ளக்காதலை வளர்ந்து வந்த மனைவி.! கருணை உள்ளம் கொண்ட கணவனின் குமுறலால் நேர்ந்த சோகம்.!!
in Chennai wife killed by her husband due to illegal affair
சென்னையில் உள்ள செம்பியம் பகுதியை சார்ந்தவர் கபில்நாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள பிரதான நகரில் இருக்கும் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவியின் பெயர் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., இவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் குடும்பத்தகாரரானது அடிக்கடி வாக்கு வாதத்தில் சென்று பின்னர் அமைதியடைவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில்., திடீரென ஏற்பட்ட தகராறை அடுத்து., ஆத்திரமடைந்த கபில்நாதன் அவரது மனைவியான அருணாவை கொலை செய்தார்.
உயிருக்கு போராடிய அவரை ஆத்திரத்தில் அடித்துவிட்டோமே என்று எண்ணி., ஸ்டான்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்து அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர ஊர்தியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருணா பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கபில்நாதனின் மனைவி அருணாவிற்கும்., அதே பகுதியை சார்ந்த மற்றொரு வாலிபருக்கு இடையே தவறான பழக்கமானது இருந்து வந்துள்ளது.
இதனை அறிந்த கபில்நாதன் மனைவியை கண்டித்து., முறையற்ற பழக்கத்தை கைவிட கூறி ஆலோசனை செய்துள்ளார். இதனை கண்டு கொள்ளாத அருணா உறவினர்களிடம் ரூ.20 இலட்சம் வாங்கி., கள்ளகாதலனுக்கு செலவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை அடுத்து மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
in Chennai wife killed by her husband due to illegal affair