சென்னையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் அரங்கேறிய சோகம்.! காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in chennai during holi festival electricity wrongly passed swimming pool
சென்னையில் உள்ள எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஹோலி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக அங்கு சிறிய அளவிலான நீச்சல் குளம் போன்று ஏற்பாடு செய்யப்பட்டு., நீர் முழுவதும் நிரப்பப்பட்டது.
அந்த நீச்சல் குளத்தில் நீர் முழுவதுமாக நிரம்பியவுடன் அதில் அங்கிருந்த மக்கள் அனைவரும் கலர் பொடிகளை தூவிவிட்டு., வண்ணங்கள் கலந்த நீருடன் இறங்கி தங்களின் ஹோலி பண்டிகையை கொண்டாடி வந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வேலையில் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாயவே., அதில் இருந்த நான்கு நபர்கள் நீரில் தூக்கிவீசப்பட்ட படியே முழ்ங்கி துடிதுடித்தனர்.இதனை கண்ட அனைவரும் பதறவே., உடனடியாக மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து நீரில் முழ்ங்கியிருந்தவர்கள் அனைவரையும் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சையானது வழங்கப்பட்டது.
பின்னர் அவசர ஊர்திகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெரும்பாலானோர் நீரில் மூழ்ங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவருக்கும் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் கவனக்குறைவால் மின்கசிவானது ஏற்பட்டு இது போன்ற விபரீதம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட வந்த இடத்தில் நால்வர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கிருந்த பெரும்பாலானோர் நீச்சல் குளத்தில் இருந்த சமயத்தில்., உரிய நேரத்தில் சுதாரித்து மின்தடையை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் பலர் பரிதாபமாக உயிரிழந்திருப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
in chennai during holi festival electricity wrongly passed swimming pool