அதிக நேரம் உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு.! உல்லாசத்தின் போதே பொத் என்று விழுந்ததில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சாஸ்திரி நகரில் இருக்கும் நான்காவது தெரு பகுதியை சார்ந்தவர் வெங்கடரமணா (வயது 48). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அங்குள்ள பெரியமேடு கற்பூரா வீதியில் இருக்கும் தனியார் தாங்கும் விடுதியில் இளம் பெண்ணுடன் சென்று அறையெடுத்து தங்கியுள்ளார். 

இவர்கள் இருவரும் காலை முதல் மாலை வரை அறையில் இருந்ததை அடுத்து., மாலை சுமார் 6.30 மணியளவில் வெங்கட்டுடன் தங்கியிருந்த பெண் பதறியடித்தபடி அரை குறை ஆடையுடன் வரவேற்பு அறைக்கு ஓடி வந்து., என்னுடன் இருந்த வெங்கட்ரமணா வாந்தி எடுத்து திடீரென மயக்கமடைந்துவிட்டார் என்று கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ ஊழியர்கள்., அவரை பரிசோதனை செய்து விட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஊழியர்கள் உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வெங்கட்ரமணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விட்டு., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., வெங்கட்டுடன் வந்த இளம் பெண் அதே பகுதியில் வீடு வேலை செய்து வந்த நிலையில்., இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததும்., விடுதியில் இது போன்ற அறையெடுத்து உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதே போன்று சம்பவத்தன்று., பணிக்கு செல்வதாக இளம்பெண் அவருடைய கணவரிடம் தெரிவித்து விட்டு விடுதிக்கு இருவரும் வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் மதிய வேலையின் போது உணவருந்திவிட்டு பின்னர் உல்லாசத்தில் ஈடுபடுதற்கு ஆயத்தமாகியுள்ளனர். அந்த நேரத்தில் நீண்ட நேரத்திற்கு உல்லாசமாக இருப்பதற்கு மாத்திரைகளை உபயோகம் செய்ய முடிவெடுத்த வெங்கட்., அனுமதிக்கப்பட்ட மாத்திரைகளை விட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு உல்லாசத்தில் ஈடுபட துவங்கியுள்ளார்.   

இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்ட சமயத்தில் தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து உறவில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் சமயத்திலேயே பெண் மீது வீழ்ந்துள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனடியாக அவரை விடுவித்துக்கொண்டு ஊழியர்களிடம் மயங்கிவிட்டார் என்று கூறி அவசர ஊர்தியை அழைத்து விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai a man died when enjoy with his illegal affair friend using Viagra tablet


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->