காதலிக்க மறுத்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கொடூர காரியத்தை அரங்கேற்றிய இளைஞர்.!! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அகிலாவின் அக்காவிற்கு திருமணம் முடிந்த நிலையில்., அவரது தங்கைக்கும் அகிலாவின் கணவர் தம்பியான சந்தோஷிற்கும் இடையே நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாற்ற எண்ணி தனது விருப்பத்தை சந்தோஷ் தெரிவித்துள்ளார். ஆனால் அகிலா அவரிடம் நட்பு வட்டாரத்திலேயே பழகி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்., சந்தோஷிடம் அகிலா பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் பலமுறை அவருக்கு தொடர்பு கொள்ள முயன்றும்., இவரின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். 

இதனால் கடும் ஆத்திரமடைந்த சந்தோஷ் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி., தனது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு செல்லும் போது நன்றாக இருந்த அகிலா காலையில் கண் விழிக்காததை அடுத்து., அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

மருத்துவமனையில் அகிலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் சுமார் 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்., உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு வீட்டில் இருந்த சமயத்தில் கதவு தலையில் இடித்ததால் இரத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம்., அதனை கவனிக்காததால் அவர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இவரின் பேச்சுக்களில் உள்ள தடுமாற்றத்தை கவனித்து சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., அகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவர்கள் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததை அடுத்து., அகிலா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில்., அகிலாவை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த நிலையில்., அவரிடம் எனது விருப்பத்தை பல முறை தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் எனது விருப்பத்தை ஏற்க மறுத்துவிட்டார். மேலும்., அவர் மற்றொருவரை காதலித்து வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை அடுத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து இது குறித்த தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது இரு குடும்பத்தாரிடமும்., அவர்களின் உறவினர்களிடமும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai a girl killed due to one side love police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->