காதலனை காண்பதற்கு விமானத்தில் பறந்து சென்னை வந்த பெண்.! தங்கியிருந்த விடுதி அறையில் நேர்ந்த துயரம்.!! கண்ணீரில் காதலன்.!!
in Chennai a girl attempt suicide coming form srilanka
இலங்கை நாட்டை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மகளின் பெயர் மலர்மேரி (வயது 22). காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியை சார்ந்தவர் அவினாஷ் (வயது 22). இவர் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளத்தின் மூலமாக நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பானது வளர்ந்து காதலாக மாறவே., இருவரும் இணையத்தின் மூலமாக தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில்., எத்தனை நாட்கள் தான் இணையத்தின் மூலமாக பேசுவது இருவரும் சந்திப்போம் என்ற பேச்சு எழும்பவே., இலங்கையில் இருந்து மலர் விமானத்தின் மூலமாக தனது காதலர் அவினாஷை சந்திக்க சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த மலரை ஊரப்பாக்கத்தில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்க வைத்து., சென்னையில் உள்ள பல இடங்களில் காதல் ஜோடி சென்று வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில்., கடந்த 25 ம் தேதியன்று இலங்கைக்கு தனது காதலி மீண்டும் செல்வதற்கு பயணசீட்டை எடுத்து கொடுத்ததற்கு அவர் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் மீண்டும் விடுதிக்கே அழைத்து வந்து மலரை விட்டுவிட்டு., பின்னர் அவினேஷ் காலையில் பணிக்காக சென்றுள்ளார்.
விடுதியறையில் நீண்ட நேரம் ஆகியும் கதவுகள் திறக்கப்படாதததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து பார்த்த போது., மலர்மேரி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., உடனடியாக காதலர் அவினேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in Chennai a girl attempt suicide coming form srilanka