கள்ளக்காதலனுடன் ஓட்டம்.! காத்திருந்த கணவன்., கதறிய மனைவி.!! துடிதுடிக்க இரத்த வெள்ளத்தில் மிதந்த சோகம்.!!
in ariyalur a husband killed their wife for illegal affair
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டறை பகுதியை சார்ந்தவர் லதா (வயது 37). இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியை சார்ந்தவர் மோசஸ் (வயது 37). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., மோசஸிற்கு அபிராமம் பகுதியியல் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி கிடைத்ததால்., அங்கேயே வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
அந்த நேரத்தில் லதாவுக்கு வேலூர் மாவட்டத்தை சார்ந்த கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால்., குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதன் காரணமாக லதாவும் கள்ளக்காதலன் கிருஷ்ணனும் சேர்ந்து வாழ முடிவு செய்து., இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., தனது மனைவி லதாவுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட மோசஸ்., உனக்கு விண்ணப்பம் செய்திருந்த பாஸ்போர்ட் குறித்த காவல் துறையினரின் விசாரணை நடைபெற்று வருவதால்., இங்கு வந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனை அறிந்து லதா பேருந்தில் அபிராமம் பகுதிக்கு வரவே., தயாராக இருந்த மோசஸ் தான் வைத்திருந்த இரும்பு கம்பியை கொண்டு தலையில் ஓங்கி அடிக்கவே., சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த லதா பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்ட மக்கள் திகைக்கவே., விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in ariyalur a husband killed their wife for illegal affair