கோடரியும் குடிக்க தண்ணீரும் கொண்டு வா.! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்., இரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி.!! வெளியான அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணா மாவட்டத்தை சார்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நாட்களில் இருந்தே குடும்பத்தகாரரானது இருந்து வந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்., வீட்டில் இருக்கும் எருமை மாடுகளை விற்பனை செய்வது குறித்த பிரச்சனையானது ஏற்பட்டுள்ளது.

தாகத்துடன் இருந்த பிச்சையா தனது மனைவியிடம் குடிக்க தண்ணீருடன் கோடரி எடுத்து வருமாறும் கூறியுள்ளார். பிச்சையாவின் எண்ணத்தை அறியாத ராஜேஸ்வரி., கோடரியை கொண்டு வந்து கணவரிடம் வழங்கியுள்ளார். 

கோடரியை வாங்கிய பிச்சையா உடனடியாக தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளார். பிச்சையா கால்களை வெட்டியதும்., வலி தாங்க முடியாமல் கதறியதை அறிந்த அக்கம் பக்கத்தினர் நள்ளிரவில் பதறியபடி வெளியே வந்து பார்த்தனர். 

அந்த சமயத்தில் ராஜேஸ்வரியின் கால்கள் துண்டான நிலையில் இரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அக்கம் பக்கத்தினர்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து., மருத்துவமனையில் உடனடியாக அவரை அனுமதித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராஜேஸ்வரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andra a husband try to kill their wife due to family problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->