மகனை கொலை செய்த கள்ளக்காதலன்! 9 மாதம் கழித்து பழிவாங்கிய தாய்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
Illegal Affairs Mordred
சென்னையை அடுத்த நெசப்பாக்கத்தில் தொழிலதிபர் கார்த்திகேயன் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகன் ரித்தேஷ் சாய்(10) ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மஞ்சுளா பணி புரிந்து வருகிறாள். இவர்களுடன் நாகராஜ் என்பவர் நல்ல நண்பர் போல பழகி வந்துள்ளார்.
இதனிடையே, மஞ்சுளாவும் நாகராஜும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதையறிந்த மஞ்சுளாவின் கணவர் கார்த்திகேயன் அவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த நாகராஜ், மஞ்சுளாவின் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து, நாகராஜை போலிஸ் கைது செய்து. சிறையில் அடைத்தது.
கடந்த 9 மாதங்களாகச் சிறையில் இருந்த நாகராஜ் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் திருவண்ணாமலையில் உள்ள செல்போன் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி நாகராஜ் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
அதாவது, மகனை கொலை செய்த நாகராஜை 9 மாதங்களுக்குப் பிறகு நாகராஜ் ஜாமீனில் வெளியில் வந்தும் அவரை கூலிப்படை உதவியுடன் மஞ்சுளா கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.