நீ பெரிய ஆளா ? உன் தலையை வெட்டி உன்னை கொன்றுவேன்., தொடரும் கொலைமிரட்டல்.,
உன் தலையை துண்டித்து கொலை செய்து விடுவேன் தொடரும் கொலைமிரட்டல்.,
மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரியாக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே.கார்வார் மாவட்டம் சிர்சியில் அமைந்துள்ள அனந்தகுமார் ஹெக்டேவின் வீட்டு லேன்லைன் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அனந்தகுமார் ஹெக்டேவை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போன் இணைப்பை துண்டித்து விட்டு இதுகுறித்து அனந்தகுமார் ஹெக்டேவிடம் தெரிவித்து உள்ளார்.
பின் இதை தொடர்ந்து ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து மத்திய மந்திரி அனந்தகுமாரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய அந்த மர்மநபர்,
நீ எல்லாம் பெரிய தலைவரா?. விரைவில் உன் தலையை துண்டித்து கொலை செய்து விடுவேன் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
I'll cut your head and kill you, continue Intimidation.