அடப்பாவி அவனா நீ., தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாத காதல் கணவன் .,காரணம் கேட்ட மனைவியின் தலையில் விழுந்த பெரும் இடி ., - Seithipunal
Seithipunal


கடலூரில் மனைவியுடன் பிரிந்து வாழும் பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய நபர்  தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கிருகம்பாக்கத்தை சேர்ந்தவர் யஷ்வந்தய்யா இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.
 
மேலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசி. இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இளவரசி யஸ்வந்த்தை 2 வருடங்களாக காதலித்து பின்  திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணமாகி ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கணவர் யஷ்வந்தய்யா தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார். ஒரு சில நாட்கள் அட பெரிது படுத்தாத இளவரசிக்கு  திடீரென அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

இதுபற்றி அவர் விசாரித்த போது யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்தவர் என்றும்  அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் என்ற உண்மை இளவரசிக்கு தெரிய வந்துள்ளது.இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த இளவரசி கணவருடன்  வாழ சம்மதிக்காமல் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், சமீபத்தில் யஸ்வந்த் இளவரசி பணிபுரியும் அழகு நிலையத்திற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அவரை  வற்புறுத்தியுள்ளார். ஆனால், இளவரசி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் .இதனால் மனமுடைந்த யஷ்வந்தய்யா தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 
 
பின் அவர் மீட்கப்பட்டு  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband was unwilling in sex, the wife shocking after asking reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->