குடிபோதையில் உல்லாசத்திற்கு அழைத்த கணவன், இரத்தவெள்ளத்தில் துடிதுடித்த மனைவி .! வெளியான அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் மூர்த்தி தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது  குடித்துவிட்டு வருவதையே வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி குடிக்கவேண்டாம் என எவ்வளோ கூறியும் மூர்த்தி அதனை பொருட்படுத்தவில்லை.இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் மூர்த்தி வழக்கம்போல் நேற்றும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.பின்னர் உல்லாசமாக இருக்க மனைவி கோமதியை  அழைத்துள்ளார்.

ஆனால்ஆத்திரத்தில் இருந்த கோமதி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பயங்கரமாக கோபமடைந்த மூர்த்தி மனைவியுடன் சண்டை போட்டு கத்தியால் கோமதியை சரமாரியாக குத்தியுள்ளார்.இதில் அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்த மூர்த்தியை தீவிரமாக தேடி கைது செய்து , விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed wife for sex abuse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->