தனியாக பிரிந்து சென்ற மனைவிக்கு, நடுரோட்டில் துடிக்க துடிக்க கணவரால் நேர்ந்த கொடூரம்.!
தனியாக பிரிந்து சென்ற மனைவிக்கு, நடுரோட்டில் துடிக்க துடிக்க கணவரால் நேர்ந்த கொடூரம்.!
சென்னை அமைந்தகரையில் வசித்து வந்தவர் டேவிட்.இவர் ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் டேவிட் மற்றும் ரேகா தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் டேவிட்டுக்கு மனைவியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் டேவிட், ரேகா என்ன செய்தாலும் அவர் மீது சந்தேகப்பட்டு அவரை தவறாக பேசி வந்துள்ளார். மேலும் அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பிரச்சினையாக மாறியது.
இந்நிலையில் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத லேகா தனது குழந்தைகளுடன் வெளியே சென்று தனியாக வீடு பார்த்து வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் லேகா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கணவர் லேகாவை கடுமையாக தாக்கி ,கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த லேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் டேவிட்டை கைது செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband killed his wift for doubt in behaviour