மனைவியை அடித்து கொன்று... பேனரில் சுருட்டி தூக்கி வந்த கொடூர கணவன்..!
மனைவியை அடித்து கொன்று... பேனரில் சுருட்டி தூக்கி வந்த கொடூர கணவன்..!
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நரிக்குறவன் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25) இவரது மனைவியின் பெயர் கௌசல்யா ( வயது 20). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் மலையில் தேன் எடுத்து, அதனை நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டத்தில் விற்று வருவார்கள். நேற்று முன் தினம், இவர்கள் இருவரும் நாகர்கோயிலுக்கு சென்று தேனை விற்பதற்காகச் சென்றுள்ளனர்.
அப்போது, கணவன் மனைவி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த முத்துராஜ், இரும்புக் கம்பியால், மனைவி கௌசல்யாவின் முகத்தில் பலமாகத் தாக்கி உள்ளார். இதனால், கௌசல்யா இறந்து விட்டார்.
பின் முத்துராஜ் இறந்த தன் மனைவி கௌசல்யாவின் உடலை, பிளக்ஸ் பேனரில் சுற்றிக் கட்டி வைத்தார். அந்த வழியாக வந்த, தனியார் லோடு லாரியில், அந்தப் பிணத்தை, தேன் பாட்டில்கள் என்று பொய் சொல்லி, லாரியில் ஏற்றிக் கொண்டு, வள்ளியூர் வந்ததும், இறங்கிக் கொண்டு, மனைவியின் பிணம் கட்டப்பட்ட பேனருடன் வீட்டிற்கு வந்தார்.
இதைக் கவனித்த, அக்கம் பக்கத்தினர், அது பற்றி கேட்டதற்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள், முத்துராஜை அடித்துக் கட்டி வைத்து, வள்ளியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.
போலீசார், கவுசல்யாவின் உடலை, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, முத்துராஜைக் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
HUSBAND KILLED HIS WIFE NEAR THIRUNELVELI