ஏன்டீ இன்னும் சமைக்கலை..போதை தலைக்கேறி கணவன் செய்த கோரசெயல்.! துடிதுடித்து கதறிய மனைவி.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகானந்தம் தன் மனைவி நிர்மலாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு நிர்மலா இன்னும் சமைக்கவில்லை என கூறியுள்ளார். பின்னர் குடிபோதை தலைக்கேறிய முருகானந்தம், ஏன் இன்னும் சமையல் செய்யவில்லை என நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார்.

அதற்கு மனைவி, "நீ என்ன வாங்கித் தந்தாய் சமைப்பதற்கு" என கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மனைவி நிர்மலா மீது ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார் .

    

இதில் தீப்பிடித்து எரிந்த நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ,உடனடியாக தீயை அணைத்துள்ளனர். பின்னர் நிர்மலாவை தூக்கி சென்று  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நிர்மலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை இறந்தார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed his wife for not cooking at time


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->