போலீஸின் அதிரடி விசாரணையில் வெளிவந்த உண்மை.! மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன் கைது.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா, என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த சூழ் நிலையில், கடந்த 15-ந் தேதி அன்று காலை, வீட்டின் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் உள்ள பம்பு செட் கிணற்றுக்கு குளிக்க சென்றார் புஷ்பா. அங்கு அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகை மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் போன்றவை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைபந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசாரை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். தனிப்படையினரும் கடந்த 5 நாட்களாக கொலையாளியை பல்வேறு இடங்களில்  தீவிரமாக தேடி வந்த நிலையில், புஷ்பா கணவர் ராமதாஸ் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால், அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.

விசாரணையில், ராமதாஸ் மும்பையில் கூலி வேலை பார்த்து வந்ததால், அடிக்கடி மும்பை சென்று வந்துள்ளார். அப்போது புஷ்பா தனது தாய் வீட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் சொந்த ஊர் திரும்பினார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், புஷ்பாவை நீ வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி நிறுத்தி அவருடைய செல்போனையும் பறித்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ராமதாஸ், தனது மனைவியை கொடுமை படுத்தியுள்ளார். தன்னை புஷ்பா பொருட்படுத்தாமல் இருந்ததால் ராமதாஸ் ஆத்திரத்தில் இருந்த ராமதாஸ், புஷ்பாவை கொலை செய்ய திட்டமிட்டு, அதன்படி கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டில் அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு குளிக்க சென்றபோது, இவரும் பின் தொடர்ந்து சென்று, புஷ்பாவின் கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி கொலை செய்து உள்ளார்.

இதையடுத்து,  நகைக்காக புஷ்பாவை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று போலீஸை நம்ப வைப்பதற்காக புஷ்பா கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின், ஒரு காதில் கிடந்த கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, மற்றொரு காதில் கிடந்த கம்மலை கழற்ற முடியாமல் விட்டு சென்றுள்ளார். மேலும், புஷ்பாவின் முகத்தை விவசாய நிலத்தில் உள்ள சேற்றில் அமுக்கி வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில், குளிக்க சென்ற மனைவியை காணவில்லை என அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது வயல்வெளியில் புஷ்பா பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராமதாசும் அங்கு சென்று புஷ்பாவின் உடலைபார்த்து கதறி அழுதுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ராமதாசை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband arrested by police in his wife murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->