கணவன் மனைவி தகராறில்.. 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி துடிக்க துடிக்க கொன்ற தாய்!
கணவன் மனைவி தகராறில்.. 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி துடிக்க துடிக்க கொன்ற தாய்!
2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பூமலூரை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவருக்கு 5 வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சிவரஞ்சனிக்கு கணவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தார்.
தனக்கு பிறகு தனது குழந்தைகள் தவிக்க கூடாது என்று எண்ணிய சிவரஞ்சனி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் அமுக்கி இரண்டு குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொன்றார்.
பின்னர் வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை ஊற்றி தானும் தீ வைத்து கொளுத்திக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் பலத்த காயமடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிவரஞ்சனியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் சிவரஞ்சனி.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிவரஞ்சனியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband and wife in dispute in 2 baby is killed