கட்டிய மனைவியை... நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்..! அதுவும் தமிழ் நாட்டில்..!!
கட்டிய மனைவியை... நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்..! அதுவும் தமிழ் நாட்டில்..!!
தன் மனைவியை மற்றொருவன் பார்ப்பதையே, கணவன் விரும்ப மாட்டான். ஆனால், தமிழகத்தில், தாலி கட்டிய தன் மனைவியை, நண்பர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறான் விநோத கணவன்.
திருவாரூர் மாவட்டம், திருத்துரைப்பூண்டியை அடுத்த தலைக்காடு பகுதியைச் சேரந்தவர் ராஜேந்திரன் (வயது 36). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் லட்சுமி (வயது 24) என்பவருக்கும், கடந்த 25-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது.
நேற்று முன் தினம், மாமனார் வீட்டில் நடந்த விருந்தில் ராஜேந்திரன் கலந்து கொண்டு, மனைவியுடன் வீடு திரும்பினார்.
பின், தன் நண்பர்கள் 2 பேருடன், தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவப்புலம் குறவன் கோயில் வனப் பகுதியில் சென்று மது அருந்தி உள்ளார். அப்போது அவரது நண்பர்கள், “நாங்கள் உன் திருமணத்திற்கு அதிக செலவு செய்து மது விருந்து வைத்தோம். நீ எங்களுக்கு என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுள்ளனர்.
உடனே ராஜேந்திரன், “உங்களுக்கு நான் வித்தியாசமான பரிசு தரப் போகிறேன். இங்கேயே இருங்கள்” என்று கூறி விட்டு, வீட்டிற்கு பைக்கில் சென்ற ராஜேந்திரன், தன் மனைவியை, பைக்கில் வரும் படி சொல்லி உள்ளார்.
அவர் மனைவி லட்சுமியும், கணவருடன் பைக்கில் சென்றுள்ளார். ராஜேந்திரன் தன் மனைவியை, குறவன் குளம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தன் நண்பர்களிடம், “இந்தா இவள் தான் நான் உங்களுக்குத் தரும் பரிசு” என்று சொல்லி, தன் மனைவியை, நண்பர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
போதையில் இருந்த அவரது நண்பர்கள், லட்சுமியை, துாக்கிச் சென்று பலாத்காரம் செய்தனர். பின் சிறிது நேரம் கழித்து, அவரது மனைவி அழுது கொண்டே வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற ராஜேந்திரனிடம், ஏன் இப்படி செய்தாய்? என்று மனைவி கேட்டதற்கு, லட்சுமியின் முகத்தில் அடித்துக் காயப் படுத்தி உள்ளார்.
நேற்று, லட்சுமி திருத்துரைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது, லட்சுமி நடந்த சம்பவம் பற்றி, மருத்துவமனைப் பணியாளர்களிடம் கூறி உள்ளார். இதனால், அவர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
இதை அறிந்து, ராஜேந்திரன் தலை மறைவாகி விட்டார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
English Summary
husband and his friends abused wife