தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தார்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு குறித்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:-  

ஸ்டெர்லைட் வன்முறை மற்றும் 99 நாள் போராட்டம் குறித்து உளவு துறையின் 
அறிக்கையை வரும் 23 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், சீலிட்ட கவரில் அறிக்கை மற்றும் வீடியோ ஆகியவற்றை வரும் 23 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 
 
ஒரே குற்ற சம்பவத்தில் எத்தனை வழக்கு பதிவு செய்துள்ளீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இதுவரை 99 குற்ற சம்பவங்கள் நடைபெற்றன எனவும், 15.76 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High Court Today Inquiry For Thoothukudi Fire


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->