தந்தைக்கு நேர்ந்த அவமானம்..? கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை கையிலெடுத்து மாணவி தேடிக்கொண்ட விபரீத முடிவு..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் பிளஸ் 2 படிக்கும் போது பறக்கை அருகே கக்கன்புதூர் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் மகன் வசந்தராஜன் என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவி வசந்தராஜனுடன் உள்ள தொடர்பை முறித்துள்ளார்.
ஆனால் வசந்தராஜன் மாணவியை தொடர்ந்து வந்து அவருக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மாணவியின் வீட்டிற்கும் சென்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தையை வசந்தராஜனும், அவரது உறவினரும் வழிமறித்து, உனது மகளை வசந்தராஜனுக்கு திருமணம் செய்துகொடுக்காவிட்டால் அவளது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.
இதை மாணவியின் தந்தை அந்த மாணவியிடம் கூறி அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி கழிவறை சுத்தம் செய்யும் வேதி பொருளை குடித்து தற்கொலைக்குமுயன்றார்.
உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் மாணவியைமீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர். ஆனாலும் வசந்தராஜனும் அவரது உறவினரும் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மாணவியின் தந்தை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வசந்தராஜன் மற்றும் அவரது உறவினர் வடிவேல் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.
English Summary
harassment happened kanniyakumari