வெளியானது விடுமுறை அறிவிப்பு..! அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு - கொண்டாட்டத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மார்ச் 4 ஆம்தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் மாசி மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 4.3.2019 (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டம்முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் 4.3.2019 அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது.

இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல.மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள்குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 9.3.2019 (இரண்டாம்சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government-holidays


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->