நாயை காப்பாற்ற போய்! அக்கா தம்பி இறந்த சோகம்! - Seithipunal
Seithipunal


தான் வளர்த்த நாயை காப்பாற்ற அக்கா தம்பி ஆற்றில் மூழ்கி இறந்துபோன சம்பவம் ஈரோடு மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேசன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு குமரேசன்,  சிலம்பரசன் என்ற மகன்களும், சத்யா, ஜெகதீஷ்வரி, காஞ்சனாதேவி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.


நேற்று காலை  சிலம்பரசன், ஜெகதீஷ்வரி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் 11 பேரும் தங்கள் வளர்ப்பு நாயுடன் 5 இருசக்கர வாகனங்களில் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயில் காவிரி ஆற்றில் ஒன்றாக குளிக்க சென்றனர்.  

ஆற்றில் வழக்கத்தை விட அதிகமாக தண்ணி சென்றது, இதனை அறியாத அவர்கள்  ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது அவர்களின் நாய் தண்ணீரில் இழுத்து  செல்லப்பட்டது.

இதனையடுத்து, நாயை காப்பாற்ற முயன்ற ஜெகதீஷ்வரி மற்றும் அவரது  தம்பி சிலம்பரசன் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்ற அவர்களின் நண்பர்களின் முயற்சி தோல்வியடையவே, போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து, சம்பவ  இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் இருவரின் உடலையும்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்யது வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Go to save the doggie Sister AND BROTHER death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->