நகராட்சி அலுவலகத்திலேயே பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் மேல் அதிகாரி..!
நகராட்சி அலுவலகத்திலேயே பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் மேல் அதிகாரி..!
பாலியல் வன் கொடுமை புரிபவர்கள் மீது, பாரபட்சம் இன்றி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தனியாக சட்டம் கூட இயற்றப்பட்டு விட்டது. ஆனால், பாலியல் குற்றங்கள் தான் குறைந்த பாடில்லை.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்வர், கோபிகா (வயது 22) சிவகாசி நகராட்சி அலுவலகத்தில், இளநிலை உதவியாளராகப் பணி புரிந்து வருகிறார்.
இதே அலுவலகத்தில், இளநிலை உதவியாளராகப் பணி புரிந்து வருகிறார், செந்தில் முருகன் (வயது 34) என்பவர். இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன.
செந்தில் முருகன், கோபிகாவிற்கு, அலுவலகத்தில் உதவுவது போல நடித்து, பழகி உள்ளார். ஆட்கள் இல்லாத சமயத்தில், அலுவலகத்திலேயே சில்மிசம் புரிந்துள்ளார்.
தன் சீனியர் என்பதால், கோபிகா, செய்வதறியாது, பொறுத்துப் போய் உள்ளார். சில தினங்களுக்கு முன்பாக, செந்தில் முருகன், கோபிகா வீட்டிற்குச் சென்றார். அங்கு அப்போது, அவரைத் தவிர யாரும் இல்லை.
இதனால், கோபிகாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால், வேலையை விட்டு துாக்கி விடுவேன், என்று மிரட்டி உள்ளார்.
பின், இதே மிரட்டலை விடுத்து, கோபிகாவை அழைத்துக் கொண்டு, திருச்செந்துார் மற்றும் கன்யாகுமரி ஆகிய ஊர்களுக்குச் சென்று, மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், கோபிகா, சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் செந்தில் முருகனை விசாரித்து வருகின்றனர். விரைவி்ல், அவர் கைது செய்யப் படுவார் என்று தெரிகிறது.
English Summary
GIRL SEXUALLY ABUSED IN MUNICIPALITY OFFICE