கெயில் குழாய்களுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு..! திருவாரூரில் பதற்றம்..!!
கெயில் குழாய்களுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு..! திருவாரூரில் பதற்றம்..!!
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்த கிராமத்தில் சுமார் 20 குழாய்களுக்கு பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடந்த சில தினங்களாகவே, விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கு, கெயில் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் குழாய்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள குழாய்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த தீ வைப்பு சம்பவம் பற்றி, திருவாரூர் காவல் நிலையத்தில், கெயில் நிறுவன அதிகாரி சீனிவாசன் என்பவர் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.