கண் முன்னே, காட்டு யானை கணவனைக் கொன்ற கொடூரம்! கதறிய மனைவி!
கண் முன்னே, காட்டு யானை கணவனைக் கொன்ற கொடூரம்! கதறிய மனைவி!
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள சாந்தம்பாறை தனியார் ஏலக்காய் எஸ்டேட்டில், மேலாளராகப் பணி புரிந்து வந்தார். அங்கே சாந்தம்பாறையில், குடும்பத்துடன் தங்கி இருந்தார். நேற்று முன் தினம், தன் சொந்த ஊரான போடிக்கு, மனைவி கவிதாவுடன் வந்து விட்டு, திரும்பவும் சாந்தம்பாறைக்கு ஜீப்பில் சென்றார்.
அவர்களுடன், குமாரின் நண்பர் சுருளியும் சென்றார். ஜீப்பில் சாந்தம்பாறையை நள்ளிரவு 12.30 மணிக்கு அவர்கள் சென்றடைந்தனர். பின், ஜீப்பை விட்டிறங்கி, வீட்டை நோக்கி நடந்து சென்றனர். அப்போது, இருட்டில், சாலையில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும், அந்த யானை இவர்களைத் துரத்தியது.
இதனால், அந்த மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினார். குமரரின் மனைவி கவிதா, அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார். அதே போல், குமாரின் நண்பர் சுருளியும், மற்றொரு வீட்டிற்குள் புகுந்து பதுங்கிக் கொண்டார். ஆனால், பின்னால் ஓடிக் கொண்டிருந்த குமார் யானையிடம் சிக்கிக் கொண்டார்.
அந்த யானை தன் துதிக்கையால், குமாரைப் பலமாகத் தாக்கியது. இதனால், நிலை குலைந்த குமார் கீழே விழுந்தார். அவரை அந்த யானை மிதித்துக் கொன்றது. இந்தக் கோரக் காட்சியை மற்றொரு வீட்டில் பதுங்கி இருந்து, ஜன்னல் வழியாகப் பார்த்த குமாரின் மனைவி கவிதா கதறி அழுதார். இது குறித்து, வனத்துறையினர் மற்றும், சாந்தம்பாறை போலசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
forest elephant killed man infront of his wife