BREAKING NEWS – பிடிபட்டான் சின்னதம்பி…!
Forest department caught chinnathambi
தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள கண்ணாடிப்புத்துாரில் முகாமிட்டுள்ள, சின்னதம்பி, வனத் துறையினருக்கு போக்கு காட்டி விட்டு, அந்தப் பகுதியில் உள்ள கரும்பு மற்றும் வாழைகளை துவம்சம் செய்து வந்தான்.
சின்னதம்பி யானை, மற்ற காட்டு யானைகளைப் போல், மனிதர்களைத் துரத்தவில்லை. இதனால், இதன் அருகில் சென்று, ஆர்வத்துடன் பலர் செல்பி எல்லாம் எடுத்துச் செல்கின்றனர்.
சின்னதம்பியை, பாதுகாப்பாக பிடித்து, வனத்திற்குள் விடுவதற்காக, வனத் துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த யானையைப் பிடித்தாலும், அதனை, மீண்டும் வனத்திற்குள் விட்டால், திரும்பி வந்து விடும், என்று நீதி மன்றத்திலே, வனத் துறையினர், கூறி உள்ளனர்.
தற்போது, சின்னதம்பியைப் பிடிக்க, இரண்டு மயக்க ஊசிகள் போட்டும், போக்கு காட்டிய சின்னதம்பி, அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டான். ஆனால், செலுத்தப்பட்ட மயக்க ஊசி தற்போது வேலை செய்துத் துவங்கி உள்ளது.
அதனால், மயங்கி மருகி நிற்கிறான், சின்னதம்பி. இதனால், வனத் துறையினர், சின்னதம்பியை, கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து விட்டனர்.
பிடிபட்ட சின்னதம்பி யானை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பராமரிக்கப்படும், என்று தெரிகிறது.
English Summary
Forest department caught chinnathambi