அடுத்த ட்விஸ்ட்.. "காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்டாரா?" உறுதிப்படுத்திய தடயவியல்.!! - Seithipunal
Seithipunal


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் இணைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 

அவர் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுதிய புகார் கடிதத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு உள்ளதால் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

இதற்கிடையே சடலமாக மீட்கப்பட்டது தன்னுடைய கணவர் இல்லை என ஜெயக்குமாரின் மனைவி தெரிவித்த அவரது மகனுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. 

ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை முடிவில் கொலை செய்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜெயக்குமார் எழுதிய இரண்டு கடிதங்களும் அவரது கையெழுத்து தான் என தடயவியல் துறை உறுதி செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forensics confirmed Congress leader jayakumar did not commit suicide


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->