பற்றி எரிந்த பயங்கரத் தீ..! நுாற்றுக் கணக்கான தீ அணைப்பு வீரர்கள்..!! 6 மணி நேர போராட்டம்..!!! விருதுநகரை மூச்சடைக்கவைத்த கம்பெனி..!!!!
பற்றி எரிந்த பயங்கரத் தீ..! நுாற்றுக் கணக்கான தீ அணைப்பு வீரர்கள்..!! 6 மணி நேர போராட்டம்..!!! விருதுநகரை மூச்சடைக்கவைத்த கம்பெனி..!!!!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்ஜி. ராஜபாளையத்திலிருந்து, சங்கரன் கோயில் செல்லும் சாலையில், முறம்பு சோழபுரம் தெற்குப் பகுதியில், சொந்தமாக ஒரு பிளாஸ்டிக் கம்பெனி வைத்திருக்கிறார்.
இந்த தொழிற்சாலையில், ஆயிரக் கணக்கானோர் வேலை பார்க்கிறார்கள். இந்த கம்பெனியில், பிளாஸ்டிக்கை அரைத்து, கப்பலுக்கு கட்டும் கயிறு, வலை, பெல்ட் உள்ளிட்ட, பல கப்பல் உபகரணங்கள் தயாரிக்கப் படுகின்றன.
இவை, உள் நாட்டில் மட்டும் இன்றி, வெளி நாடுகளிலும், ஏற்றுமதி செய்யப் படுகின்றன. நேற்று காலை, இங்கு பணி புரியும் ஊழியர்கள், கம்பெனியை ஒட்டி இருந்த, பிளாஸ்டிக் கோடோவுனுக்கு அருகில் உள்ள, கழிவு பிளாஸ்டிக்குகளில் இருந்து, தீ பற்றி எரிவதைக் கண்ட ஊழியர்கள், அதைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
ஆனால், தீ விரைவாகப் பரவி, உற்பத்தி செய்து வைக்கப் பட்டிருந்த, பொருட்கள் வைத்துள்ள பகுதியிலும், தீப்பிடிக்கத் துவங்கியது. இதனால், உடனே தீ அணைப்புத் துறைக்கு தகவல் அனுப்பினர்.
தீயின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்ததால், ராஜபாளையம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், நெல்லை மாவட்டம் புளியங்குடி உள்ளிட்ட 9 தீ அணைப்பு துறையிலிருந்து, நுாற்றுக் கணக்கானோர், சம்பவ இடத்தி்ற்கு விரைந்து வந்து, 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், தீயை அணைத்தனர்.
ஊழியர்கள் யாரும், அப்போது தொழிற்சாலையில் இல்லாததால், உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை. ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
இதனால், அருகில் உள்ள சாலையில் போக்குவரத்து, முற்றிலும் பாதிக்கப் பட்டது.
English Summary
fire accident in plastic company