பர்னிச்சர் கடையில் தீவிபத்து!! சிசிடிவி காட்சிகளில் வெளியான உண்மை!!
fire accident
சாலிகிராமத்தில் உள்ள ராஜாஜி காலனி ஏவிஎம் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் ஆற்காடு சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
அவரது கடையின் பின்புறம் குடோன் உள்ளது. இன்று அதிகாலையில் அந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவி எரிந்தது.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 3 வாகனங்களில் வந்த தீயனைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அனைத்தனர்.
கடையில் இருந்த கட்டில், மெத்தை, சோபா செட், சேர், டேபிள்கள், 1 இருசக்கர வாகனம் உள்ளிட்ட 50 லட்சம் மதிப்பு உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியது.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது அவருக்கு வேண்டாத யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.