நள்ளிரவில், போலீஸ் காதலர்கள் கட்டிப் புரண்டு சண்டை….! - Seithipunal
Seithipunal


 

திருச்சி ஜங்சன், ரயில் நிலையத்திற்கு வெளியே, ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் பணி புரி்ந்து வருகிறார் குமார். ரயில்வே ஸ்டேசன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறார் ஜோதிகா.

இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி ஃபோனிலும் பேசிக் கொள்வர்.

இந்த நிலையில், குமார், ஜோதிகாவிற்கு ஃபோன் பண்ணி உள்ளார். அவர் ஃபோனை எடுக்கவில்லை. பிறகு, நீண்ட நேரம் கழித்து ஃபோனை எடுத்துப் பேசினார். அப்போது குமார், “ ஏன் ஃபோனை எடுக்கலை” என்று கேட்டுள்ளார். அதற்கு ஜோதிகா, “நைட் டூட்டி பாத்துட்டு வந்து துாங்கிட்டேன்” என்று கூறி உள்ளார்.

“சரி நைட் வாரேன். பாத்துக்கலாம்” என்று குமார் பேசி உள்ளார். பின், குமார் நன்றாக குடித்து விட்டு, போதையுடன், ரயில்வே நிலையம் சென்று, ஜோதிகாவை ஃபோனில் அழைத்துள்ளார்.

குமாரைப் பார்க்க வெளியே வந்தார் ஜோதிகா. உடனே குமார், “ ஏன் நீ ஃபோனை எடுக்கலை. எவன் கூட பேசிக்கிட்டிருந்தே” என்று கேட்டுள்ளார். அதற்கு ஜோதிகா, “நீ என் புருஷனா, என்னைக் கேள்வி கேட்பதற்கு?” என்று சொன்னார்.

உடனே, குமார் ஜோதிகாவின் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு ஜோதிகாவும், குமாரின் கன்னத்தில் அறைந்தார். பின், இருவரும், மல்லுக்கட்டி சண்டை போட்டு, கட்டி உருண்டனர்.

சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த எஸ்.ஐ., யாரோ திருடன் தான், ஜோதிகாவைத் தாக்குகிறான், என்று நினைத்து, அவர்களை விலக்கி உள்ளார். பின், விபரம் அறிந்து, ரயில்வே எஸ்.பி.-க்கு தகவல் அனுப்பினார்.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight between police lovers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->