பெற்ற மகளை வெட்டி சாய்த்த தந்தை! சென்னை அருகே பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னை, செங்கல்பட்டு அருகே பெற்ற மகளை அருவாளால் சரமாரியாக வெட்டிய தந்தையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமநாராயணன். இவரின் மகள் பார்கவி (16).(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்கவி செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 

பார்கவி தனது உறவினர் மகன் ராஜ்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், பார்கவியின் பெற்றோருக்கு தெரியவர, 
உறவினர் மகன் தான் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்காமல், இப்போது இந்த காதல் வேண்டாம் எனவும், உன் படிப்பு முடிந்ததும் உங்கள் இருவருக்கும் நாங்களே திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பார்கவி அதை கேட்கவில்லை. நேற்று அதிகாலை 4 மணியளவில், ராமநாராயணன் எழுந்து பார்த்த போது தன மகள் பார்கவியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பார்கவியின் காதலன் வீட்டுக்கு சென்று பார்த்தார், அங்கு பார்கவி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மகளிடம் சமரசம் பேசிய அவர், அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். 

வீடு திரும்பியதும், தந்தைக்கும், மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, அப்போது, ராமநாராயணன் வீட்டில் இருந்த வீச்சரிவாளை எடுத்து மகளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பார்கவி அலறி துடித்தார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை அடுத்து புகாரின்படி செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாராயணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father to ATTACK the daughter near Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->