இதற்காகத்தான் கொன்றேன்.! குழந்தைகளை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த தந்தையின் அதிரவைக்கும் வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரை சேர்ந்தவர் பத்மநாபன்- செல்வராணி தம்பதியினர். இவர்களுக்கு ஹேமவர்ஷினி, ஸ்ரீஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் செல்வராணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஒரு கை மற்றும் கால் வாதத்தால் முடங்கிப்போயிருக்கிறது. 

மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து பத்மநாபனுக்கும், செல்வராணிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுகொண்டே இருந்தது .மேலும் பத்மநாபன் குடிக்கு அடிமையானதால், தினமும் செல்வராணியுடன் சண்டை போட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளித்த நிலையில் போலீசார்கள் செல்வராணியை அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அதற்கு குழந்தைகள் அப்பா போதையில் தனியாக இருக்கிறார்.  நாங்கள் வரவில்லை என்று கூறியுள்ளனர்.அதனால் செல்வராணி குழந்தைகளை அங்கே விட்டு சென்றுள்ளார்.

      

பின்னர் மறுநாள் காலை, பத்மநாபனின் தாய் வந்து பார்க்கையில் குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர்  உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீவிர தேடலுக்கு பின் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது அவர் விசாரணையில் கூறியதாவது, வீட்டில்,என் தாய் மற்றும் மனைவி இடையே எப்போதும் தகராறு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால், எனக்கு வாழ்க்கையின் மீது பெரும் விரக்தி ஏற்பட்டது.

 அதோடு மட்டுமில்லாமல் எனது மனைவிக்கு பக்கவாதம், எனக்கு அதிக கடன் பிரச்னை என பல பிரச்சினைகளால் நான் அவதியடைந்து வந்தேன். இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபட ,அனைவரையும் கொலை செய்து விட்டு , நானும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன். 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் எனது அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையே மீண்டும்  பிரச்னை ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த நான் கோபத்தில், இருவரையும் கடுமையாக தாக்கினேன். மனைவியின் உறவினர்கள் வந்து, அவரை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். என் தாய் பக்கத்து வீட்டுக்கு சென்று தங்கிவிட்டார். 

ஆனால் இரண்டு மகள்கள் மட்டும், என்னுடனே இருந்தனர். இந்நிலையில் எனது மகள்களை இவர்களிடம் விட்டு செல்ல கூடாது என எண்ணி அவர்கள் தூங்கியபோது, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, நானும் தூக்கு போட்டு  தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன். அப்போது, என் தாய் வீட்டுக்குள் வந்ததால், தப்பி ஓடிவிட்டேன்.என கூறியுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father said reason for killed two daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->