மது போதையில் வந்த மகனை கொன்ற தந்தை!
மது போதையில் வந்த மகனை கொன்ற தந்தை!
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயலுக்கு முக்கிய காரணம் திரைப்படங்கள், தவறான இணையதளங்கள், குடிப்பழக்கம் இதில், நம் தமிழக அரசு மதுக்கடை நடத்தி மக்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. இந்த அரசு நடத்தும் மதுக்கடைகளால், தமிழகத்தில் பல குடும்பங்கள் சிதைந்து போய் உள்ளன.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெருமாள் பாலையம் ஊராட்சியிலுள்ள கொத்துமலை அடிவாரத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவரது இளைய மகன் மாரியப்பன் மதுபோதையில் அடிக்கடி தன தந்தையிடம் தகராறு செய்வது வழக்கம்,
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மது போதையில் சொத்தை பிரித்து தருமாறு தந்தை அண்ணாமலையிடம் மாரியப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அண்ணாமலை தாக்கியதில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடித்தனர்.
மது போதையில் ரகளையில் ஈடுபட்ட மகனை தந்தையே கொன்றது சேலம் மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father killed by drunken son