மகள்களுக்கு பாலியல் தொல்லை - 'போக்சோ'வில் தந்தை கைது
Father arrested for sexually harassing 2 daughters in salem
சேலம் மாவட்டத்தில் மது போதையில் இரண்டு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு இரண்டு 9 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி தனது மகனுடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து இரண்டு மகள்களுடன் வசித்து வந்த தொழிலாளி, இரவு நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்து இரண்டு மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் பாட்டியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமிகளின் பாட்டி இது தொடர்பாக காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Father arrested for sexually harassing 2 daughters in salem