திருச்சியில் திடீரென சாலை மறியல் செய்த தமிழக விவசாயிகள்..!
திருச்சியில் திடீரென சாலை மறியல் செய்த தமிழக விவசாயிகள்..!
காவிரி மேலாண்மை அமைக்காததை மத்திய அரசை கண்டித்தது திருச்சி பேருந்து நிலையம் பகுதியில் தமிழக விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது என்றும், தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகக் குற்றம்சாட்டியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் 28-ற்கும் மேற்பட்ட தமிழக விவசாய சங்கத்தினர் முழங்கி வருகின்றனர் .
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த இந்நிலையில் இவர்களை காவல் துறையின் கைது செய்துள்ளது.
English Summary
farmers union protest against Government