வீட்டில் திருடிய பணிப்பெண்ணை மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்து கொண்ட பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


சென்னை: நடிகை ஷோபனா, தன் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை மன்னித்து மீண்டும் பணி வழங்கியுள்ளார். 

பிரபல திரைப்பட நடிகையான ஷோபனா சென்னையில், தேனாம்பேட்டை சீனிவாசா சாலையில் தனது தாய் ஆனந்தத்துடன் வாழ்ந்து வருகிறார். பரதநாட்டிய கலைஞரான இவர், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ் உட்பட பல்வேறு திரை பிரபலங்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களை நடித்துள்ளார். இவரது வீடு 3 அடுக்கு கொண்டது. அதில் முதல் தளத்தில் தாய் ஆனந்தம் வசித்து வருகிறார்.

வீட்டின் இரண்டாம் தளத்தில் நடிகை ஷோபனா வசிக்கிறார் மற்றும் தரை தளத்தில் பரத நாட்டியபயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விஜயா என்ற பெண், இவரது வீட்டில் கடந்த 1 வருடமாகத் தங்கி ஷோபனாவின் தாயை கவனித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகத் தாய் ஆனந்தம் வீட்டில் வைத்திருந்த பணம் சிறுக சிறுக காணாமல் போனதால் நடிகை ஷோபனா, வீட்டுப் பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீஸார் நடிகை ஷோபனா வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பணிப்பெண் விஜயா சிறுக சிறுக ரூ.41 ஆயிரம் திருடியது தெரியவந்தது. 

மேலும் திருடிய பணத்தை கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து ஊரில் உள்ள மகளுக்கு யுபிஐ செயலி மூலமாக அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வறுமையின் காரணமாக பணத்தைத் திருடியதாக, மன்னிப்பு கேட்டதால் நடிகை ஷோபனா புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இதனை அடுத்து, பணிப் பெண்ணை மன்னித்து மீண்டும் வீட்டில் பணி செய்ய ஒப்புக்கொண்டார். மேலும், சம்பளப் பணத்திலிருந்து திருடிய பணத்தை பிடித்தம் செய்துகொள்வதாக ஷோபனா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress home money theft work woman


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->