படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் விபத்து! உடல்நசுங்கி பரிதாபமாக பலியான பிரபல நடிகர்.!
famous actress dead by accident
சென்னை அயனாவரம், குருவப்பா தெருவில் வசித்து வந்தவர் சார்லஸ் டேவி . 47 வயது நிறைந்த அவர் சினிமாவில் துணை நடிகராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பவர் சையத்குபுதீன் இவரும் சினிமா துணை நடிகர் ஆவார்.
இவர் நேற்று திருவேற்காட்டில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அடுத்த பள்ளிக்குப்பம் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அதனை தொடர்ந்து பேருந்தின் சக்கரம் சார்லஸ் டேவி மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சையத்குபுதீன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து , சார்லஸ் டேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் பூபாலன் என்பவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. மேலும் இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதனை சீரமைக்க கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
English Summary
famous actress dead by accident