மனைவியிடம் ஏற்பட்ட மனக்கசப்பு..! மனம் வெறுத்து மடியில் இருந்து குதித்த காவலர்..!!
மனைவியிடம் ஏற்பட்ட மனக்கசப்பு..! மனம் வெறுத்து மடியில் இருந்து குதித்த காவலர்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரின் அருகே, மொட்ட மலையில் உள்ள 11-வது பட்டாலியன் போலீஸ்காரராக சுகுமார் என்பவர் பணி புரிந்து வந்தார். இவரது சொந்த ஊர், திருப்பாச்சேத்தி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, சுமித்ரா என்ற பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டார், சுகுமார். ஆரம்பத்தில், சந்தோசமாகப் போய்க் கொண்டிருந்த இவர்களது மண வாழ்வில், புயல் வீசத் துவங்கியது.
அடிக்கடி, இருவருக்குள்ளும், தகராறு வந்துள்ளது. இதனால், சுகமாரன் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். இந்த நிலையில், கடந்த ஜுன் 1-ஆம் தேதி, பட்டாலியன் முகாமில், இரவுப் பணியில் இருந்த சுகுமாரன், அங்கிருந்து மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இதைக் கண்டு, அந்த வளாகத்தில் இருந்த மற்ற போலீசார் அவரை முதல் உதவிக்காக ஸ்ரீவில்லிபுத்துார், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, அவரை மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலன் இன்றி, நேற்று காலை, சுகுமாரன் அரசு ஆஸ்பத்திரியிலேயே மரணம் அடைந்தார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
family problem police man suicide