படித்தது பிளஸ்-2..! பார்ப்பது மருத்துவமா?! திருப்பூரை கலக்கிய ஆனந்த் MBBS கைது!
படித்தது பிளஸ்-2..! பார்ப்பது மருத்துவமா?! திருப்பூரை கலக்கிய ஆனந்த் MBBS கைது!
+2 படித்து நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவர் ஆகமுடியும் என்ற சூழ்நிலையில், திருப்பூரில் பிளஸ் 2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், கரியாம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர் அதே பகுதியில் ''சிவன்மலை'' என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார். அந்தப்பகுதி மக்களிடம் இவருக்கு நல்ல கைராசியான மருத்துவர் என்ற பெயரும் கிடைத்தது.
இந்நிலையில், திருப்பூர் கிளை நிர்வாகிகள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு மருத்துவர் ஆனந்த் போலி மருத்துவர் என்ற புகார் கடிதங்கள் தொடர்ந்து வந்துள்ளன.இதனையடுத்து, களத்தில் இறங்கிய திருப்பூர் கிளை நிர்வாகிகள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சவுந்தர் ராஜன் தலைமையில், அந்த கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.
விசாரணையில் மருத்துவர் ஆனந்த் பிளஸ்-2 வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலி மருத்துவர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். இந்த சமத்துவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
FAKE DOCTOR ARREST IN THIRUPOOR