வட மாநிலத்தவரால் தமிழகத்தில் நடந்த கொடூரம்.!! தொடரும் அவலம்.!! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே பாலியல் பலாத்காரம் நமது நாட்டில் பெருமளவு அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பால் மனம் மாறாத சிறுமிகள் இதற்கு பலிக்கடாவாக்குவது தொடர்கிறது. இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் இப்படி ஓர் சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Image result for RAPE

வட மாநிலமான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சின்ராவுத்- சம்சா தம்பதியினர். இவர்கள் போராக்ஸ் பகுதியில் சுமார்  7 வருடமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை இவர்களின் 5 வயது மகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் அதே பகுதியை சார்ந்த பரவத் சிங் சிறுமியை தனியாக தூக்கி சென்றுள்ளார். அதன் பின் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அந்த சம்பவத்தை தெரிவிக்க, சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்துள்ளனர். இதில் சிறுமிக்கு ரத்த கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். 

Related image

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் வடமாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை அடித்து உதைத்து காவலரிடம் ஒப்படைத்தனர். 

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உயர்ந்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடந்த இந்த  சம்பவம் பொதுமக்கள், பெற்றோர்கள் இடையே மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FAISTY HAPPEND IN TAMILNADU BECAUSE OF NORTH INDIANS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->