முதலவரை தரக்குறைவாக பேசி பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


மக்களிடையே, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப காலகட்டங்களில், சமூக வலைதளங்களில் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. மேலும், இந்த சமூக வலைதளங்களின் மூலம் பல்வேறு விதமான செய்திகளையும் உலகின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் அனைவரும் பகிர்ந்து பார்த்து பயன்பட்டு வருகின்றனர். அதேபோல் இதனால் பல்வேறு தீமைகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமானவர்களும் நிறைய பேர் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக பேஸ்புக் வலைதளத்தில், மன்னை சிவா என்பவரை பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கு தெரிந்திருக்கும். தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளரான இவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் தனது பேஸ்புக் பக்கத்தில், தரக்குறைவாக பேசி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளதாக சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த, சுரேஷ்குமார் மற்றும் சுதா ஆகிய இருவரும், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த குற்றப்பிரிவு போலீசார் மன்னை சிவாவை தகவல் தொழில்நுட்பச்சட்டம், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ், கைது செய்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

facebook user mannai siva arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->