தூங்கும் போது வெடித்த ஏசி! கோடை ஆரம்பிக்கும் போதே இப்படியா! மக்கள் பீதி! - Seithipunal
Seithipunal


ஏசி வெடித்ததில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. 

கிருஷ்ணகிரி சாந்தி நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட், இவரது மனைவி அஞ்சலா மேரி, கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கும் போது ஏசி பயன்படுத்தயுள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை விடிந்ததும் ஆல்பர்ட் மட்டும் நடைப்பயிற்சிக்கு சென்றிருக்கிறார், அஞ்சலா மேரி மட்டும் தனியாக வீட்டில் தூங்கிகொண்டு இருந்தார். நடைபயிற்சி முடிந்து வீடுவந்த ஆல்பர்ட் படுக்கை அறையில் புகை மூட்டம் அதிக அளவில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ஏசி வெடித்து தீப்பிடித்தது தெரியவந்துள்ளது.

school headmaster dies as ac explodes in krishnagiri

இதனால் அஞ்சலா மேரி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏசி தொழில் நுட்ப வல்லுநர்களிடம் இது தொடர்பாக போலீசார் அறிக்கை கேட்டுள்ளனர். கோடைகாலம் வந்துள்ள நிலையில் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் ஏசி பயன்படுத்தவே அச்சமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exploded AC during sleep It's like summer begins People panicked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->