மேலும் மேலும் தமிழகத்துக்கு தலைகுனிவு!. சுற்றுலாவுக்கு வந்த அயல்நாட்டு இளம்பெண்ணை 5 பேர் கூட்டுபலாத்காரம்!. - Seithipunal
Seithipunal



திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமம் போன்ற ஆன்மிக தலங்களும், சாத்தனூர் அணை போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளது. இவற்றை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து விடுதிகளில் அறை எடுத்து தங்கி பார்வையிட்டு செல்கின்றனர்.

ரஷ்யாவிலிருந்து திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்த 21 வயதுடைய பெண்ணை அடையாளம் தெரியாத 5 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சுயநினைவை இழந்த அப்பெண் இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணை திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி நேற்று நேரில் பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி , இந்த சம்பவம் தமிழக மக்களிடையே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை எனவும் விசாரணையை தீவிரப்படுத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு தொகை நாளை அல்லது நாளை மறுதினம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். சுயநினைவை இழந்த அந்தப் பெண் ரஷ்ய மொழி மட்டும் பேசுவதால் ரஷ்ய மொழி பேசக் கூடிய ஒரு நபரை கொண்டு விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exotic foreign girl who was on tour was raped


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->