அதிமுகவில் ஒற்றை தலைமையா? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக தெற்கு மாவட்டச் வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினார்.

ஆர்பாட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது,

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தொண்டர்கள் உதவியுடன்  பிடித்து போலீசில் ஒப்படைத்ததற்கு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் அந்த கள்ள ஓட்டு போட்டவரை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அதிமுகவின் தலைமை குறித்து அவர் தெரிவிக்கையில், தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு தொண்டரகள் செயல்பட்டு வருகின்றனர். அதே வேளையில் கட்சி முடிவெடுத்தால் ஒற்றை தலைமையின் கீழ்  தொண்டர்கள் எந்த குழப்பமும் இன்றி இயங்குவார்கள் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX Minister Kadamboor Raju Said About ADMK Leadership


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->