ஓட்டுக்கு 5000 பணம் வாங்கிகொண்டு எனக்கு வாக்களியுங்கள்!! ஈவிகேஎஸ்.இளங்கோவனின் சர்ச்சை பேச்சு!!
evks elangovan speech in madurai
தேனி மக்களவைத் தொகுதியில், திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பாக, ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் உசிலம்பட்டிm சேடப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுரை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர், " இங்கு பிறக்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். அவர்கள் 500 ரூபாய் கொடுத்தால், 5000 கேளுங்கள்" என மக்களிடையே பிரச்சாரத்தில் உரையாற்றியுள்ளார்.
மேலும், "பணம் வாங்கிக் கொண்டு, என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனே செய்து கொடுப்பேன்" என அவர் பேசியுள்ளார்.
"ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு. இவற்றை ஊழலாக பார்க்க வேண்டும் என்ற நிலையில், இவ்வாறு, ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஓட்டுக்கு பணம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதற்கு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என அரசியல் விமர்சகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
evks elangovan speech in madurai